புதிய பிரதம நீதியரசர் -அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்
சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சுரசேனவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரான முர்து பெர்னான்டோவின் பதவிக்காலம் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு பிரீதி பத்மன் சுரசேனவின் பெயரை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்மொழிந்திருந்தார்.
இன்று சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை, இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளதை அடுத்து, சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சுரசேன பதவியேற்கவுள்ளார்.