சஜித்தை வேட்பாளராக நிறுத்த ஐதேக செயற்குழு அங்கீகாரம்
ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக, சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சற்று முன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.
ஐதேக தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிய செயற்குழுக் கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்தும் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.
அதற்கு ஐதேக செயற்குழு ஒருமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
சஜித் பிரேமதாச சார்பில் நாளை தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் வரும் 9ஆம் நாள் உருவாக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளராகவே, சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார்.