மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ‘கழுகு’ம் களமிறங்குகிறது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று மற்றும் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி என்ற கட்சியே கழுகு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

எனினும், இந்தக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட, நேற்று வரை 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

ஒக்ரோபர் 6ஆம் நாள் மதியம் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *