மேலும்

சீனாவின் உயர்மட்ட குழு சிறிலங்கா வந்தது

சீனாவின் உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகள் குழுவொன்று – மூன்று நாட்கள் பயணமாக இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், செயலருமான சென் மின்’னர் தலைமையிலான இந்தக் குழுவில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சிறப்பு விமானம் ஒன்றில் இவர்கள் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சீனாவின் உயர்மட்டக் குழுவினரை, சிறிலங்கா அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் சீன தூதுவர் செங் ஷியுவான் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *