நான்காவது அதிபர் வேட்பாளர் அறிவிப்பு
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமது கட்சிின் வேட்பாளராக துமிந்த நாகமுவ போட்டியிடுவார் என, முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.
ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேவிபி சார்பில் அனுரகுமார திசநாயக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சோசலிசக் கட்சியின் சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நான்காவது வேட்பாளராக, துமிந்த நாகமுவவின் பெயர் இன்று முன்னிலை சோசலிசக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை, வரும் அதிபர் தேர்தலில் 17 கட்சிகள், வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.