மேலும்

மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘உத்தர தேவி’ நூல்

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘உத்தர தேவி’ என்ற நூல், நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

பிசப் கல்லூரி அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், ‘உத்தரதேவி’ சிங்கள நூலின் முதல் பிரதியை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசியல் பிரமுகர்கள், முன்னாள் படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஓய்வுபெற்ற பின்னர் ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *