மேலும்

கொலைப் பின்னணி கொண்ட கோத்தாவுக்கு ஆதரவு இல்லை – குமார வெல்கம

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வேட்பாளராகப் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான குமார வெல்கம, நேற்று இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“கொலைப் பின்னணியைக் கொண்ட ஒருவரை என்னால் ஆதரிக்க முடியாது.

ஆட்சியில் இருந்த ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எல்லா அரசாங்கங்களுமே, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கொலைகளைச் செய்துள்ளன.

அத்தகைய பின்னணியில் இருந்து யாராவது வருகிறார்கள் என்றால், அந்த நபருக்கு எனது ஆதரவு இருக்காது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *