மோடி – மைத்திரி இருதரப்பு பேச்சுக்கள் நிறைவு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்று முடிந்துள்ளன.
இன்று மதியம் சிறிலங்கா அதிபர் செயலகத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு, அதிபர் செயலக வளாகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு சிறிலங்கா அதிபரினால் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிபர் செயலகத்தில் இந்தியப் பிரதமருக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியது.
மதியபோசனத்துடன் கூடிய இந்த இருதரப்புப் பேச்சுக்களில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுக்கள் சற்று முன் முடிவடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.