கொட்டும் மழைக்கு மத்தியில் மோடியை வரவேற்றார் மைத்திரி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொட்டும் மழைக்கு மத்தியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.
அதிபர் செயலகத்தை சற்று முன்னர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, செங்கம்பள வரவேற்புடன் இராணுவ அணிவகுப்பு மரியாதைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடும் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பிரதமரை குடையுடன் வரவேற்று அழைத்துச் சென்றார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
இதையடுத்து. மதிய விருந்து மற்றும் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.