தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவி நீக்கம்
சிறிலங்காவின் தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் சிறிலங்கா அதிபரின் அழுத்தங்களை அடுத்தே தனது பதவியை விட்டு விலகினார் என்று கூறப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் சாட்சியம் அளித்திருந்தார்.
அதில், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் ஒழுங்காக நடத்தப்படுவதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.