மேலும்

மாதம்: March 2019

சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஜெனிவா தீர்மான வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வாக்கெடுப்பை நடத்த விடாமல் மைத்திரியைக் காப்பாற்றிய ரணில்

சிறிலங்கா அதிபருக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா செல்லும் குழு – சிறிசேனவின் கையில் கடிவாளம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியான பிரதிநிதிகள் குழுவை அனுப்பமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு செல்கிறது மாரப்பன தலைமையிலான குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

கென்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா சுற்றாடல் பேரவையின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  இன்று காலை கென்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிசேனவின் ஒதுக்கீடுகளுக்கு கைதூக்கமாட்டேன் – சரத் பொன்சேகா

சிறிலங்கா அதிபரின் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தாம் வாக்களிக்கப் போவதில்லை என்று, ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்திய- பாகிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்கும் சிறிலங்கா

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்காக 32.58 மில்லியன் டொலரை கோருகிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், 32.58 மில்லியன் டொலரை கோரியுள்ளது.

வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்பு – ஒளித்து விளையாடிய கூட்டமைப்பு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க நேற்று கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த போதும், அதன் 11 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர்.

சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடு- தோற்கடிக்கப்படுமா?

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.