மேலும்

நாள்: 4th March 2019

திருக்கேதீச்சர வரவேற்பு வளைவு உடைப்பு – பரவலாக அதிருப்தி, கண்டனம்

மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் முகப்பில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ள அதேவேளை, வரவேற்பு வளைவை மீண்டும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் மேடையில் ஏறுகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அட்மிரல் கரன்னகொட உள்ளிட்ட கடற்படையினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, மேல்நீதிமன்ற  ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குற்றச்சாட்டு சுமத்தப்படும் அதிகாரிகளை இடைநிறுத்த  வேண்டும் – சாலிய பீரிஸ்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், தமது செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் கலாநிதி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் கொள்வனவு

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார்.

மகிந்த அணியில் இருந்து வெளியேறுவோம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் ஐதேக- ஜேவிபி திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச அணியில் இருந்து வெளியேறப் போவதாக விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

காணாமல் போனோருக்கான பணியத்தின் பிராந்திய கிளை மாத்தறையில் திறப்பு

காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில்  நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.