மேலும்

நாள்: 27th March 2019

கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.

கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

வெற்றி வேட்பாளர் இன்னமும் கிடைக்கவில்லையாம் – மகிந்தவே கூறுகிறார்

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெற்றி பெறக்கூடிய வேட்பாளரைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறான ஒருவரையே தான் ஆதரிப்பேன் என்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது – சுமந்திரனுக்கு சமரசிங்க பதிலடி

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.