கென்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா சுற்றாடல் பேரவையின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை கென்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டாவின் சிறப்பு அழைப்பின் பேரிலேயே, சிறிலங்கா அதிபர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளார்.
நாளை பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் சிறிலங்கா அதிபர் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.