மேலும்

நாள்: 23rd March 2019

அனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம்  நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

கொண்டச்சியில் 25 ஏக்கரில் கைத்தொழில் வலயம்

மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில் வலயம் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு

நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் டேவிட்சனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்காவில் முதல் முறையாக செயற்கை மழை

சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.