சிறிசேனவின் ஒதுக்கீடுகளுக்கு கைதூக்கமாட்டேன் – சரத் பொன்சேகா
சிறிலங்கா அதிபரின் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தாம் வாக்களிக்கப் போவதில்லை என்று, ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“நாட்டின் அரசியலமைப்பை திரும்பத் திரும்ப மீறியுள்ள அதிபரின் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நான் கைதூக்க மாட்டேன்.
அரசாங்கத்தின் முயற்சிகளைத் தடம்புரளச் செய்யும் முயற்சிகளில் அவர் தொடர்ந்தும் ஈடுபடுகிறார்.” என்றும் குற்றம்சாட்டினார்.