மேலும்

அதிபர் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று இதுவரை தாம் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச அல்லது சமல் ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று ஊகங்கள் வெளியாகும் நிலையில், மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த அவர், ”அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *