மேலும்

மாதம்: August 2018

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் ரணில் தொலைபேசியில் பேச்சு

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கானுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவுஸ்ரேலியா நடத்தவுள்ள பிரமாண்ட கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை

அவுஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ககாடு கூட்டு கடற்படைப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

அம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம் – பென்டகன்

சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் – சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர்

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.

“கடற்புலிகளைத் தடுக்க முடிந்தது, வாஜ்பாயினால் தான்“ – ரணில்

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்து,  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பருக்குள் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – 780 மில்லியன் ரூபாவை ஒதுக்க திறைசேரி இணக்கம்

வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள – உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் உள்ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன்.

தனது ஊடகச் செயலரை ‘முட்டாள் பிசாசு’ என்று திட்டி அவமானப்படுத்திய மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது ஊடகச் செயலாளரை பகிரங்கமாக, “முட்டாள் பிசாசு” என்று திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்,  இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.