மேலும்

தனது ஊடகச் செயலரை ‘முட்டாள் பிசாசு’ என்று திட்டி அவமானப்படுத்திய மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது ஊடகச் செயலாளரை பகிரங்கமாக, “முட்டாள் பிசாசு” என்று திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த விசாரணையின் பின்னர், விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்தார்.

மகிந்த ராஜபக்ச  ஊடகவியலாளர்களுக்கு செவ்வி அளித்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகச் செயலர் உதித் லொக்குபண்டார, மகிந்தவை நெருங்கியிருந்த ஊடகவியலாளர்களை விலகி நிற்குமாறு கூறினார்.

இதனால் கோபமடைந்த மகிந்த ராஜபக்ச, ”மோட யக்கக்” ( முட்டாள் பிசாசு) என்று சிங்களத்தில் திட்டினார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத உதித் லொக்குபண்டார, சங்கடத்துடன் சிரித்து சமாளித்துக் கொண்டார்.

மகிந்தவின் தனிப்பட்ட செயலராகவும், அவரது ஊடகச் செயலராகவும் உள்ள உதித் லொக்குபண்டார, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்குபண்டாரவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *