மேலும்

வடக்கு முதல்வரிடம் தகவல் பெறும் அவசியம் இராணுவத்துக்கு இல்லை – பிரிகேடியர் அத்தபத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் கோருகின்ற தகவல்களை, வடமாகாண அரச அதிகாரிகள் வழங்கக் கூடாது என்றும்,  அவ்வாறு அவர்கள் தகவல் கோரினால், தன்னிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்,

“அரசியலில் ஈடுபடுபவர்கள் கூறுகின்ற இத்தகைய கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அத்துடன், அவர்களிடம் தகவல்களை பெற வேண்டிய அவசியமும் இராணுவத்தினருக்கு கிடையாது.

வடக்கு முதலமைச்சரின் கருத்துக்கு, சிறிலங்கா அரசாங்கமே உரிய பதிலை வழங்க வேண்டும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பாக,  இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உரிய வகையில் நாம் செயற்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *