மேலும்

தவறான பாதையில் செல்கிறார் கோத்தா – தயான் ஜயதிலக

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று, முன்னாள் இராஜதந்திரியும்,  அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

“ஞாயிறு லக்பிம” வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கோத்தாபய ராஜபக்ச தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி பண முதலைகளும், கடும்போக்கு இராணுவத்தினரும், தான் இருக்கிறார்கள்” என்றும் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் பாதையை உருவாக்குவதற்காக, எலிய அமைப்பை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியவர் தயான் ஜயதிலக என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *