கொமன்வெல்த் மாநாட்டுக்காக லண்டன் செல்கிறார் சிறிலங்கா அதிபர்
லண்டனில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம், பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே,
கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் அடுத்தவாரம் பிரித்தானியா செல்கிறார்.
கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் எதிர்வரும் 16ஆம் நாள் தொடக்கம் 20ஆம் நாள் வரை இடம்பெறும்.
இந்த மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, லண்டனில் தங்கியிருக்கும் போது. பிரித்தானிய பிரதமர் தெரெசா மே மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தெரிவித்துள்ளார்.