மேலும்

அஞ்சல்மூல வாக்களிப்பு – நாளை ஆரம்பம்

postal-votesஉள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘ நாளை, 22 ஆம் நாள், காவல் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், அஞ்சல் மூல வாக்குகளை அளிக்க முடியும்.

ஏனைய அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் இடம்பெறும்.

அஞ்சல் மூல வாக்களிப்பை கட்சி பிரதிநிதிகள் கண்காணிக்க முடியாது.

எனினும், சுயேட்சைக்குழுக்களின் அல்லது அரசியல் கண்காணிப்பு அமைப்புகள் வாக்களிப்பை பார்வையிட முடியும்.

இம்முறை சுமார் 560,000 அரச பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.”  என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *