பிணைமுறி மோசடி அறிக்கை இணையத்தில் வெளியானது
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை, இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், பிணைமுறி அறிக்கையை ஆங்கிலத்தில் கிடைக்கும் என்று சிறிலங்கா அதிபர் தமது கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இந்த அறிக்கை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிப்பதற்காக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.