அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்புடன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.
இம்முறை, 560,536 அரச பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும், 24ஆம், 25ஆம் நாள்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.