கபொத உயர்தரத் தேர்வு – ஹாட்லி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை
கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த கபொத உயர்தரத் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பௌதிக விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கபொத உயர்தரத் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை தேர்வுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.
இதன்படி, பௌதிக விஞ்ஞான பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவரன் சிறிதரன் துவாரகன் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு மற்றும் வணிகப் பிரிவில் முதலிடங்களை மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவிகள் இருவர் பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் திலினி சந்துனிகா என்ற மாணவியும், வணிகப் பிரிவில் துலானி ரசந்திகா தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.