சம்பந்தனிடம் நலம் விசாரித்தார் விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
உடல்நலக் குறைவினால், இரா.சம்பந்தன் கடந்த வியாழக்கிழமை கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றுக்காலை அவர், சிகிச்சைகள் முடிந்து, முழுமையாக குணமடைந்த நிலையில், வீடு திரும்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த இரா.சம்பந்தனை நேற்று பிற்பகல் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து நலம் விசாரித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.