பெப்ரவரி 7 நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் அனைத்தும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் நாள் நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல்கள், எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையிலேயே, பரப்புரைகளை பெப்ரவரி 7ஆம் நாள் நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.