பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடிய இளைஞனிடம் சிறிலங்கா காவல்துறை விசாரணை
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடந்த மாதம் 26ஆம் நாள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளன்று, அவரது படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடிமை தொடர்பாக, நேற்றுமுன்தினம் குறித்த இளைஞன் முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.
அங்கு விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்குட்படுத்தப்பட்ட இளைஞன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் என்பதும், இவர் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான அன்ரனி ஜெயநாதனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.