மேலும்

கருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

karunaஅரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கருணாவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று சட்டமா அதிபர்  திணைக்களம், பிரதம நீதிவானுக்கு அறிவித்திருந்தது.

இதையடுத்து, கருணாவுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கருணா கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *