இந்தியாவுக்குப் பயணமானார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, மூன்று நாட்கள் பயணமாக, இன்று காலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் அனைத்துலக பௌத்த கலாசார சம்மேளனத்தின் இரண்டு நாள் மாநாட்டில், கலந்து கொள்வதற்காகவே, மகிந்த ராஜபக்ச மும்பைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மாநாடு நாளை தொடக்கம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்சவுடன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் இந்தியா சென்றுள்ளார்.