சிறிலங்கா கடற்படையின் 22 ஆவது தளபதியாக பொறுப்பேற்றார் வைஸ் அட்மிரல் ரணசிங்க
சிறிலங்காவின் 22 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார்.
முன்னதாக, ஓய்வுபெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடற்படைத் தளபதிக்குரிய அதிகாரபூர்வ வாளை, வைஸ் அட்மிரல் ரணசிங்கவிடம் கையளித்தார்.
இதன் பின்னர், கடற்படை தளபதியாகப் பதவியேற்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டு, வைஸ் அட்மிரல் ரணசிங்க பதவியைப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, அட்மிரல் சின்னையாவுக்கு கடற்படை மரபுகளுக்கமைய அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வழியனுப்பு நிகழ்வு இடம்பெற்றது.