மேலும்

இம்மாதம் புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த

Mahinda-depatureசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசும், புதுடெல்லிக்குப் பயணமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் மத நிகழ்வு ஒன்றில் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்திய அரசாங்கத்தின் பின்புலத்துடன், மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வந்திருந்த போது, புதுடெல்லிக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *