மேலும்

வடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடு

north-korea-sri-lanka-flagsவடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான நுழைவிசைவுக் கட்டுப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது.

அணுகுண்டு மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்திய வடகொரியா மீது, ஐ.நா பாதுகாப்புச் சபை தடைகளை விதித்துள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவின் இணைய இலத்திரனியல் பயண அனுமதி முறைக்கு தகுதி பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன்,  வடகொரியாவைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட தனிநபர்களை சிறிலங்காவுக்குள் அனுமதிக்காதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தடைப்பட்டியலில் இல்லாத வடகொரிய நாட்டவர்கள், இடைத்தங்கல் பயணத்துக்காக வந்தாலும் கூட உரிய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த கட்டுப்பாடுகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நீடிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *