மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான இரு செயன்முனைப்புகள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

missingகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முக்கியமான இரண்டு செயல்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட நாளான ஓகஸ்ட் 30, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளாக உள்ளது.

இந்நாளையொட்டி இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்கள் வழமை போல் ஒங்கி ஒலிக்க உள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மட்டத்தில் இரண்டு செயற்முனைப்புக்களில் இறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் அரச படைகளினாலும் அதன கட்டமைப்புகளினாலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தனித்த இணையத்தளம் ஒன்றினை நா.தமிழீழ அரசாங்கம் இந்நாளன்று வெளிக்கொணருக்கின்றது.

இதேவேளை அனைத்துலக மனித உரிமைகள்  அமைப்பொன்றுடன் இணைந்து மனித உரிமை அமைப்புகள், சமூக அமைப்புகள், செயற்பாட்டாளர்களை நோக்கிய உலகளாவிய ரீதியிலான கையெழுத்து இயக்கம் ஒன்றினையும் தொடங்குகின்றது.

இவ்விரு செயற்முனைப்புக்களையும் ஒகஸ்ட் 30ம் நாளன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *