ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐதேக அனுமதியாது – லக்ஸ்மன் கிரியெல்ல
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஐதேக அனுமதிக்காது என்று அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வரைவில், பல சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன.
இது சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாங்கள் அவரிடம் எழுத்துமூலம் கோருவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.