கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞன் சிறிலங்கா அதிரடிப்படையால் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில், ஆவா குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
19 வயதுடைய தருஷன் என்ற இளைஞனே கைது செய்யப்பட்டவராவார். கொக்குவில் பகுதியில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினரால், இவர் கைது செய்யப்பட்டார்.
கொக்குவிலில் கடந்த மாதம் 30ஆம் நாள் சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.