மேலும்

மேலும் மூன்று கடற்படை அதிகாரிகள் கைதாகின்றனர்

Commodore D.K.P. Dassanayake2008-2009 காலப்பகுதியில் கொழும்பு பிரதேசத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மேலும் 3 சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, இந்த கடத்தல்களுடன், தொடர்புடைய மேலும் மூன்று கடற்படையினர் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன.

கொமடோர் தசநாயக்க அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்றிருந்தவர் என்பதால், அவர் பற்றிய தகவல்களை வெளியிட கடற்படையினர் பலரும் தயங்கி வந்தனர்.

எனினும், அவர் கைது செய்யப்பட்டதை அடுத்தும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும், பல விபரங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்றே இவரிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலும் மூன்று கடற்படையினர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *