கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞனும் கைது
கொக்குவிலில் கடந்த மாதம் 30 ஆம் நாள், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், மற்றொரு இளைஞனைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று அதிகாலை நடத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது, உந்துருளி ஒன்றும் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கொக்குவில் மேற்கைச் சேர்ந்த புஸ்பராசா டக்சன் என்ற இளைஞனே கைது செய்யப்பட்டவராவார்.
மேலதிக விசாரணைக்காக இவர் யாழ். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை யாழ். நீதிவான் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொக்குவில் வாள்வெட்டு தொடர்பாக இதுவரை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.