மேலும்

தெற்கின் சதித் திட்டம் – பதிலளிக்காமல் நழுவிய முதலமைச்சர்

cmவடக்கு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, தெற்கிலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போது, அதுபற்றிப் பேசுவதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.

அண்மையில், வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், தம்மை நீக்குவதற்கான திட்டங்கள் தெற்கில் இருந்தே வகுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது வடக்கு மாகாண அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் செவ்வி அளித்துள்ளார்.

அதில், உங்களை அகற்றும் சதி கொழும்பில் தீட்டப்பட்டதாக கூறியிருந்தீர்கள். எனினும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமலேயே கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளது. இந்த நிலையில், உங்களை அகற்றுவதற்கான சதி இடம்பெற்றதாக இன்னமும் நினைக்கிறீர்களா? ஏன்? என்று கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமரசம் தொடங்கியுள்ள போது, பிரேத பரிசோதனை போன்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *