எனது ஆணையை மீறியே காங்கேசன்துறையில் இருந்து இரும்பு எடுத்துச் செல்லப்பட்டது – தயா ரத்நாயக்க
இராணுவத் தளபதியாக இருந்த தனது ஆணையை மீறி ஒரு குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பாரிய இயந்திரங்களை உடைத்து, பழைய இரும்புக்காக விற்பனை செய்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதால், அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து, ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளித்த போதே, லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, தனது ஆணையை மீறி செயற்பட்ட குழுவே இதற்குப் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
நேற்றுக்காலை 9.30 மணி தொடக்கம், 12.30 மணி வரையாக 3 மணிநேரம், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்த மோசடி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் அதிபர் ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது.
ஒரு பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த தளபதியின் கூற்று பொறுப்பற்றது அப்படியானால் அவ்வேளை அதிகாரம் இருந்த்து யார் கையில்