சீன- சிறிலங்கா பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து பேச்சு
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சீனாவின் உயர்மட்ட கடற்படை அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
சீன கடற்படையின் கிழக்குப் பிராந்திய கட்டளைப் பீடத்தின், பிரதி கட்டளை தளபதியான, றியர் அட்மிரல் சென் ஹாவோ தலைமையிலான சீன அதிகாரிகளே இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.