மேலும்

எட்கா உடன்பாடு குறித்த நான்காவது கட்டப் பேச்சுக்கள் புதுடெல்லியில் ஆரம்பம்

india-sri-lankaஎட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இந்திய – சிறிலங்கா அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளன.

இன்று தொடக்கம் மூன்று நாட்கள் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன. ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுக்களின் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் எட்கா உடன்பாட்டை இறுதி செய்வது தொடர்பாக இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்படும்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இன்று இந்தப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாளை மறுநாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கும் போது, எட்கா உடன்பாட்டை இறுதி செய்யும் விவகாரம் குறித்தும் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *