நாளை வியட்னாம் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை அங்கிருந்து வியட்னாமுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்கின் அழைப்பின் பேரில், நாளை வியட்னாம் செல்லும் சிறிலங்கா பிரதமர் வரும் 19ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார்.
இந்தப் பயணத்தின் போது, அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்கள் விவகாரங்கள் தொடர்பாக, வியட்னாம் பிரதமருடன், சிறிலங்கா பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, தொலைத்தொடர்பு, மீன்பிடி, விவசாயம், இயந்திர உற்பத்தி, கட்டடப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டவுள்ளது.