மேலும்

இரண்டு பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் நாளை கொழும்பு வருகின்றன

PNS Shamsheerபாகிஸ்தான் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிஎன்எஸ் நாசர் மற்றும் பிஎன்எஸ் சாய்ப்  ஆகிய போர்க்கப்பல்களே நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளன.

இரண்டு நாடுகளினது கடற்படைகளுக்கும் இடையிலான பலமான மரபுசார், நிபுணத்தவ மற்றும் சகோதரத்துவ உறவின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், வரும் 13ஆம் நாள் பிஎன்எஸ் நாசர்  போர்க்கப்பலில் வரவேற்பு உபசாரம் ஒன்றுக்கும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *