சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக ஓய்வு
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28ஆம் நாள்) ஓய்வுபெற்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவி வெற்றிடமாகியுள்ளது.
பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக, 35 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இதன் போது, அவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
55 வயதை எட்டிய நிலையில், சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகவுக்கு, பனாகொடவில் உள்ள இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் பிரியாவிடை அளிக்கப்பட்டது.