மேலும்

அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

npcசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை, வடக்கு மாகாணசபை இன்று ஒருமனதாக நிராகரித்துள்ளது.

மாகாணசபையின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அதிகாரப் பகிர்வை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் இந்தச் சட்டமூலம் அமைந்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று மாகாணசபை அமர்வில் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பிடுங்கும் செயலை மேற்கொள்வதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனமதாக எதிர்த்து வாக்களித்தனர்.

அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தை ஊவா மாகாணசபையும் நேற்று நிராகரித்திருந்தது.

மாகாணசபையின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னதாக, மாகாணசபைகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதாலேயே, இது மாகாணசபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்குமாறு முதலமைச்சர்களைக் கோருவதற்காக, அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் கூட்டம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்திருந்தார்.

ஒன்பது மாகாண முதலமைச்சர்களுக்கும், இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

எனினும் வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு அனுப்பப்படாததால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *