யாழ்ப்பாணத்தில் 1.62 வீத நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் – பாதுகாப்புச் செயலர்
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் பரப்பளவு குறைந்திருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றனவா என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், எஞ்சியுள்ள நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் 2.2 வீதமான நிலப்பகுதியை தமது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். அண்மையில் இந்த அளவு, 1.62 வீதமாக குறைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.