மேலும்

தனிமைச் சிறையில் கருணா – கைதிகளால் அச்சுறுத்தல்

karuna-arrestஅரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனியான சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறைக்கைதிகளால், கருணாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை, எம்-2 சிறைவளாகத்தில் தனியான அறையில் அடைத்துள்ளனர்.

அத்துடன் அவருக்கு சிறைச்சாலையில் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

karuna-arrest

சிறைக்கு வெளியில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்வதற்கு கருணா கோரிக்கை விடுத்தால், அது பரிசீலிக்கப்படும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *