கொழும்பில் இன்று சிறப்பு செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில், இன்று பிற்பகல் 4 மணி தொடக்கம், 6 மணி வரை இந்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து விளக்கமளிப்பதற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை குறிப்பாக சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கிலுமே இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் நடத்தவுள்ள முதலாவது செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்